கரூர்
இந்தியாவின், தமிழகத்தின், கரூர் மாவட்ட தலைமையிடமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய கரூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
கரூர் (Karur) இந்தியாவின், தமிழகத்திலுள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .
விரைவான உண்மைகள் கரூர், நாடு ...
கரூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 10.960100°N 78.076600°E / 10.960100; 78.076600 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
பகுதி | சோழ நாடு, கொங்கு நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கரூர் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ஜோதிமணி |
• சட்டமன்ற உறுப்பினர் | வே. செந்தில்பாலாஜி |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் டி. பிரபுசங்கர், இ.ஆ.ப. |
ஏற்றம் | 147 m (482 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,34,506 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 639 xxx |
தொலைபேசி குறியீடு | 91-(0)4324 |
வாகனப் பதிவு | TN 47 |
சென்னையிலிருந்து தொலைவு | 397 கி.மீ (246 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 78 கி.மீ (48 மைல்) |
ஈரோட்டிலிருந்து தொலைவு | 66 கி.மீ (41 மைல்) |
இணையதளம் | karur |
மூடு
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ஆகும். கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.