கிண்ணர நாடு
From Wikipedia, the free encyclopedia
கிண்ணரர்கள் (Kinnara Kingdom) பண்டைய பரத கண்டத்தின் இமயமலை பகுதிகளில் வாழ்ந்த உயர் சக்தி மனிதர்களாக புராணங்களும், மகாபாரதமும் கூறுகிறது. கிண்ணர நாட்டில் வாழும் மக்களை கிண்ணரர்கள் அழைக்கப்படுகின்றனர்.
புராணங்கள் கிண்ணரர்களை குதிரை கழுத்து மனிதர்கள் எனக் கூறுகிறது. கிண்ணரர்கள் மனிதர்களை விட உயர் சக்தி கொண்டவர்களாகவும்; இந்திரன் போன்ற தேவர்களை விட சக்தி குறைந்தவர்களாகவும் புராணங்கள் கூறுகிறது.
கிண்ணரர்கள் மேல் பாதி மனித உடலும்; கீழ் பாதி குதிரை உடலும் கொண்டவர்கள் என மகாபாரத இதிகாசம் வருணிக்கிறது. கிண்ணரர்கள் இமயமலையில் உயரத்தில் வாழ்பவர்கள் என்றும்; சிறந்த குதிரைப்படை வீரர்கள் என்றும்; கந்தர்வர் மற்றும் கிம்புருசர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் மகாபாரதம் விளக்குகிறது.