கிறித்துமசு குடில்
From Wikipedia, the free encyclopedia
கிறித்துமசு குடில் என்பது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது போல அமைக்கப்படும் இயேசு கிறித்துவின் பிறப்பு நிகழ்வின் முப்பரிமாண சித்தரிப்பை குறிக்கும். இது வீடுகளிலும், ஆலயங்களிலும், பேரங்காடி போன்ற பொது இடங்களிலும் கிறித்துமசு காலங்களில், குறிப்பாக திருவருகைக் கால இறுதி நாட்களில் துவங்கி கிறிஸ்து பிறப்புக் காலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும்.
இதில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை முதலிய மிருகங்களும் இடம் பெறும். பெறும்பான்மையாக இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாடடைக்குடிசையிலோ நிகழ்வது போன்று சித்தரிக்கப்பட்டும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.
முதன் முதலில் கி.பி. 1223இல் அசிசியின் பிரான்சிசுவினால் இவ்வகை குடில்கள் உயிருள்ள மிருகங்களாலும், மனிதர்களை மாதிரிகளாகவும் கொண்டு அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[1]