கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை என்பது 22 சூன் 1941 முதல் 9 மே 1945 வரை ஐரோப்பிய அச்சு நாடுகள் மற்றும் அதன் ஆதரவு நாடு பின்லாந்து என்பன சோவியற் ஒன்றியம், போலாந்து மற்றும் சில வட, தென், கிழக்கு ஐரோப்பாவைச் சூழ்ந்திருந்த நேச நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் ஓர் சணண்டைக்களமாகும். இது அந்நாடுகளுக்கு ஏற்ப வேறுபட்ட பெயரினால் அழைக்கப்படுகிறது. முன்னாள் உரசிய ஒன்றியம் மகா தேசப்பற்றுப் போர் (உருசியம்: Великая Отечественная Война) எனவும், செருமனி கிழக்குப் போர்முனை (இடாய்ச்சு மொழி: die Ostfront[3]), கிழக்குப் படையெடுப்பு (இடாய்ச்சு மொழி: der Ostfeldzug) அல்லது உரசியப் படையெடுப்பு (இடாய்ச்சு மொழி: der Rußlandfeldzug).[4] எனவும் அழைக்கின்றன.
கிழக்குப் போர்முனை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போர் பகுதி | |||||||||
கடிகார சுழற்சியில் மேல் இடமிருந்து:பேர்லினில் சோவியற் இல்லூசின் Il-2 தரைத் தாக்குதல் விமானம்; கூர்ஸ்க் போரில் செருமனி டைகர் I கவசவாகனம்; கிழக்குப் போர்முனையில் செருமனி Ju 87 ஆழ்ந்துசெல் குண்டு வீச்சு விமானம், குளிர்காலம் 1943-1944; உக்ரேனில் செருமனியால் கொல்லப்படும் யூதர்கள்; செருமனியின் சரணடைவில் வில்கெம் கெய்டெல் கைச்சாத்திடல்; சுடாலின்கி்ராட் சண்டையில் சோவியற் படைகள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
அச்சு நாடுகள்
ஜெர்மனி[1] அச்சு நாடுகளின் பொம்மை அரசுகள் சிலோவாக்கியா குரோசியா போரில் ஈடுபட்ட துணை நாடுகள் பின்லாந்து (1944 வரை) | நேச நாடுகள்
சோவியத் ஒன்றியம் டுவான் மக்கள் குடியரசு[2] முன்னாள் அச்சு நாடுகள் அல்லது ஆதரவாளர்கள் உருமேனியா (1944 இருந்து) பல்கோரியா பேரரசு (1944 இலிருந்து) |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அடோல்ஃப் ஹிட்லர் (கட்டளைத் தளபதி) ஏர்ன்ஸ் வூச் கெய்ன்ஸ் குடெரியன் போல் லுட்விக் இவால்ட் வொன் கிலேய்ஸ்ட் குன்தர் வொன் குலுர்ச் கியோர்க் வொன் குச்லர் வில்கெம் ரிட்டர் வொன் லெப் வி்கெம் லிஸ்ட் எரிச் வொன் மன்ஸ்டெய்ன் வோட்டெர் மெடெல் பிரிட்ரிச் பவுலோஸ் கேர்ட் வொன் ரன்ட்டெட் பெடோர் வொன் போக் † பெலிக்ஸ் டெய்னர் போர்டினன்ட் ஸ்கோர்னர் எர்காட் ராவுஸ் வோல்டர் வொன் ரெய்ச்சானு கெல்முத் வெய்ட்ங் இயன் அன்டொனெசு | ஜோசப் ஸ்டாலின் (கட்டளைத் தளபதி) கார்கி சுகொவ் நிகன்டர் ஐவன் கொனெவ் வாசிலி சுய்கோவ் ரொடின் மலினோவ்ஸ்கி கொவ்கான்ஸ் பக்ராம்யன் ஐவன் பெட்யூன்ஸ்கி வலேரியன் ப்ரோலொவ் வசில்லி குரோடொவ் லியோனிட் கொவோரொவ் மிக்கைல் கிர்போனொஸ் † மிக்கைல் கோசின் பியோடொர் இசிடோரோவிச் குஸ்நெட்சோவ் ஐவன் மஸ்லென்னிக்கோவ் கிரில் மெரிட்ஸ்கோவ் டிமிட்ரி பவ்லோவ் ஐவன் பெட்ரோவ் மாகியன் போபோவ் மக்சிம் பூர்கயெவ் பவெல் ரொட்மிஸ்ட்ரோவ் செம்யோன் டிமோஸ்சென்கோ பெயோடொர் டொல்புபூக்கின் அலெக்சான்டர் வசிலெவ்கி நிகோலாய் பெயோடோரோவிச் வட்டுடின் (கா.ம.) கிளிமென்ட் வொரோசிலோவ் அன்ரேய் யெரிமென்கோ மட்வெய் சக்கரோவ் அலெக்செய் அன்டனோவ் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்செவ்ஸ்கி ஜேசிப் புரோஸ் டி்டோ சிக்மன்ட் பேர்லிங் கரோல் சுவிர்ட்ஸ்சிவ்கி மிச்சல் ரோலா-ஸிமியேர்கி மைக்கல் நிக்கோலா ராடேசு கொன்ஸ்டான்டின் சனாடெசு வின்ஸ்டன் சர்ச்சில் கெலியோடொர் பிகா |
||||||||
இழப்புகள் | |||||||||
பார்க்க: | பார்க்க: |
கிழக்குப் போர்முனைச் சண்டை வரலாற்றில் பாரிய இராணுவ மோதலாக அமைந்தது. சண்டை, பட்டினி, குற்றம், நோய் மற்றும் படுகொலை என்பவற்றால் ஏற்பட்ட முன்னோடியாயமையாத கொடூரம், பாரிய அழிவு, பெரும் வெளியேற்றம் மற்றும் பலவித வாழ்க்கையின் மிகப் பெரியளவு இழப்பு என்பன தனிச்சிறப்பு பெற்றுக் காணப்பட்டது. கிழக்குப் போர்முனையானது ஏறக்குறைய சகல மரண முகாம்கள், மரண ஊர்வலங்கள், பலாத்கார வாழ்விடம் மற்றும் யூதர்களுக்கெதிரான கலவரம் என்பவற்றால் பெரும் இன அழிப்புக்கு மத்தியமாகக் காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் 70 மில்லியன் மரணங்களில் அதிகளவாக 30 மில்லியன் பொதுமக்கள் மரணம் கிழக்குப் போர்முனையால் ஏற்பட்டது. கிழக்குப் போர்முனை இரண்டாம் உலகப் போரின் விளைவினை முடிவுக்கு கொண்டுவர, குறிப்பாக செருமனியின் தேற்காடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.[5][6][7] இது செருமனி படையின் அழிவு, ஏறக்குறை அரை நூற்றாண்டு செருமனியின் பிளவு மற்றும் இராணுவ, உற்பத்தி வல்லரசாக சோவியற் ஒன்றியம் உருவாக வழிவகுத்தது.