கீர்வான் யுத்த விக்ரம் ஷா
நேபாள அரசர் / From Wikipedia, the free encyclopedia
கீர்வான் யுத்த விக்ரம் ஷா (Girvan Yuddha Bikram Shah) (நேபாளி: गीर्वाणयुद्ध विक्रम शाह) (19 அக்டோபர் 1797 – 20 நவம்பர் 1816), 1799 முதல் 1816 முடிய நேபாள இராச்சியத்தை ஆண்ட நான்காவது மன்னராவார்.
விரைவான உண்மைகள் கீர்வான் யுத்த விக்ரம் ஷா, ஆட்சிக்காலம் ...
கீர்வான் யுத்த விக்ரம் ஷா | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சிக்காலம் | 8 மார்ச் 1799 – 20 நவம்பர் 1816 |
முடிசூட்டுதல் | 8 மார்ச் 1779[1] |
முன்னையவர் | ராணா பகதூர் ஷா |
பின்னையவர் | ராஜேந்திர விக்ரம் ஷா |
பிறப்பு | 19 அக்டோபர் 1797 காத்மாண்டு நகரச் சதுக்கம் காத்மாண்டு அரண்மனை |
இறப்பு | 20 நவம்பர் 1816 (அகவை 19)(அம்மை நோய்) காத்மாண்டு நகரச் சதுக்கம் காத்மாண்டு அரண்மனை |
துணைவர் | சித்தி லெட்சுமி தேவி ராஜ்ஜிய லெட்சுமி தேவி கீர்த்திரேகா |
குழந்தைகளின் பெயர்கள் | நரேந்திர விக்ரம் ஷா ராஜேந்திர விக்ரம் ஷா சத்திய ரூப லெட்சுமி தேவி சௌபாக்கியசுந்தரி |
அரச மரபு | ஷா வம்சம் |
தந்தை | ராணா பகதூர் ஷா |
தாய் | கந்தவதி தேவி |
மதம் | இந்து சமயம் |
மூடு
கீர்வான் யுத்த விக்ரம் ஷா பிறந்த ஒன்றறை ஆண்டுகளில், அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டிய ராணா பகதூர் ஷா, தன் மனைவி கந்தவதி தேவியுடன் நாட்டை விட்டு வெளியேறியதால், குழந்தை கீர்த்திவான் யுத்த ஷாவின் பெரியன்னை ராணி ராஜராஜேஸ்வரி, இளவரசன் சார்பாக அரசப்பிரதியாக, தலைமை அமைச்சர் தாபா வம்சத்தின் பீம்சென் தபா உதவியுடன் நாட்டை நிர்வகித்தர். கீர்வான் யுத்த விக்ரம் ஷா தமது 19வது வயதில் அம்மை நோய் தாக்கி இறந்ததால், அவரது மகன் ராஜேந்திர விக்ரம் ஷாவிற்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.