குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா
இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா (Mar Kuriakose Elias Chavara, மலையாளம்: മാർ കുര്യാക്കോസ് ഏലിയാസ് ചാവറ, 10 பெப்ரவரி 1805 - 3 சனவரி 1871) என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவரும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தவரும் ஆவார்.[1] இவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு நவம்பர் 23, 2014, கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது புனிதர் பட்டம் வழங்கினார்.
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா St. Kuriakose Elias Chavara ܡܪܝ ܩܘܪܝܩܘܣ ܐܠܝܐ വിശുദ്ധ കുര്യാക്കോസ് ഏലിയാസ് ചാവറ | |
---|---|
மன்னானம் மார் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா | |
சீரிய கத்தோலிக்கரின் தலைமை ஆட்சியர் | |
பிறப்பு | (1805-02-10)பெப்ரவரி 10, 1805 கைநக்கரி, குட்டநாடு, திருவிதாங்கூர் இராச்சியம் |
இறப்பு | சனவரி 3, 1871(1871-01-03) (அகவை 65) கூனம்மாவு, கொச்சி இராச்சியம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | 8 பெப்ருவரி 1986, கோட்டயம் by திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் |
புனிதர் பட்டம் | 23 நவம்பர் 2014, உரோமை by திருத்தந்தை பிரான்சிசு |
முக்கிய திருத்தலங்கள் | கோட்டயத்தைச் சேர்ந்த மன்னானம் - புனித யோசேப்பு சீரோ மலபார் தயிரா கோவில் |
திருவிழா | 3 சனவரி (சீரோ மலபார்) |
சித்தரிக்கப்படும் வகை | சீரோ மலபார் சபை - புனிதர், சமூக சீர்திருத்தர் |
இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண்துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியா கார்மேல் சபை” என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண்துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” என்று அழைக்கப்படுகிறது.