குருகுலம்
பண்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் குருவின் ஆசிரமம் / From Wikipedia, the free encyclopedia
குரு குலம் (சமசுகிருதம்: गुरुकुल) இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும்.[1] தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் குருகுலக் கல்வி முறை, இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டானியார்கள் வருகை வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தது. குரு பரம்பரை இன்றளவும் போற்றப்படுகிறது.
குரு குலத்தில் படிக்கும் அனைத்து வர்ணங்களைச் சார்ந்த மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் குரு கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
குரு குலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும். குரு குலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை பிரம்மச்சாரிகள் என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.