கொல்லா
From Wikipedia, the free encyclopedia
கொல்லா (golla) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், மேய்ச்சல் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார். இவர்கள் யாதவ நாயுடு மற்றும் வடுகாயர் என்றும் அழைக்கப்படுகின்றனர். [1]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
தெளிவான அளவுகோல் இல்லை | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தமிழ், தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
யாதவர் |
மூடு
இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர். இவ்வகுப்பினர் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் யாதவா என்ற பெயரில் உள்ளனர்.[2]