![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Tselvan.jpg/640px-Tselvan.jpg&w=640&q=50)
ச. தமிழ்ச்செல்வன்
From Wikipedia, the free encyclopedia
ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும்,[1][2] களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். இவரது `வெயிலோடு போய்' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்றாகும். அரசியல் எனக்குப் பிடிக்கும் என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது.
விரைவான உண்மைகள் ச.தமிழ்ச்செல்வன்S. Tamilselvan, பிறப்பு ...
ச.தமிழ்ச்செல்வன் S. Tamilselvan | |
---|---|
![]() | |
பிறப்பு | ச. தமிழ்ச்செல்வன் (1954-05-27)27 மே 1954 நாகலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் |
தொழில் | எழுத்தாளர், திறனாய்வாளர் |
மொழி | தமிழ் |
இலக்கிய இயக்கம் | தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | "வெயிலோடு போய்" |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது, 2008 |
துணைவர் | இரா.வெள்ளதாய் |
பிள்ளைகள் | சித்தார்த் |
இணையதளம் | |
www |
மூடு