சத்தாதன்வன்
From Wikipedia, the free encyclopedia
சத்தாதன்வன் அல்லது சத்தாதனுஸ் (Shatadhanvan or Shatadhanus) மௌரியப் பேரரசின் எட்டாவது பேரரசர் ஆவார். புராணக் குறிப்புகளின் படி, தேவவர்ம மௌரியனுக்குப் பின்னர் ஆட்சி வந்த சத்தாதன்வன் மௌரியப் பேரரசை கி.மு. 195 முதல் 187 முடிய ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் சத்தாதன்வன், எட்டாவது மௌரியப் பேரரசர் ...
சத்தாதன்வன் | |
---|---|
எட்டாவது மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு.195 – 187 |
முன்னையவர் | தேவவர்மன் |
பின்னையவர் | பிரகத்திர மௌரியன் |
பிறப்பு | கி.மு.224 |
இறப்பு | கி.மு.187 பாடலிபுத்ரம் |
அரசமரபு | மௌரிய வம்சம் |
மூடு
இவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர், இவரது மகன் பிரகத்திர மௌரியன் ஆட்சிக்கு வந்தார்.[1]