சரதுசம்
From Wikipedia, the free encyclopedia
சரதுசம் (ஆங்கிலம்: Zoroastrianism, சொராஷ்ட்ரியம்) உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றாகும். சிறுபான்மையாக இது மசுதயசுனா என்றும் மயியானியம்என்றும் சரத்துசரின் நெறி என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1] ஈரானிய இறைதூதர் சொராட்டிரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிவு வடிவமான அகுரா மஸ்தா எனும் இறைவனைப் போற்றுவதாக இந்தச் சமயம் எழுச்சி பெற்றது.[2]
பொ.மு 5000 முதல் 2000 ஆண்டுகளுக்கு இடையில் சொராட்டிரியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[3] பொ.பி 633 முதல் 654 வரை இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பு, சொராட்டிரியமே பாரசீகப் பேரரசுகளின் முதன்மை நெறியாக விளங்கியிருக்கிறது.[4] இன்றைக்கும் பெரும்பாலான சொராட்டிரிகள் இந்தியாவிலும் ஈரானிலும் வாழ்ந்து வருகின்றனர்.[5]