உலகாயதம்
From Wikipedia, the free encyclopedia
சார்வகம் என அழைக்கப்படும் உலகாயதம் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி பொருள்முதல்வாத அனுபவாத அணுகுமுறையை இது முன்னிறுத்துகிறது. கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது.[1] உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது.[2] இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்திய மெய்யியலில் பொருளியவாத, இயற்கை விளக்க நோக்கு உடைய மெய்யியல் சார்வாகம் அல்லது லோகாயதம் அல்லது நாத்திகம் ஆகும். இது இந்திய மைய மெய்யியலான வேத மெய்யியலுக்கும், சடங்குகளுக்கும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்த பொருளிய வாதமாகும்.
சார்வாகம் என்பது இந்தியத் தத்துவ இயலில், தத்துவ ரீதியான ஐயப்பாடுகள் மற்றும் வேத மறுப்பு ஆகியவற்றைக் கைக்கொண்ட ஒரு பிரிவாகும்.
இந்தியத் தத்துவ இயலில், சார்வகம், நாத்திக வாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது. இதே போன்றதொரு வகைப்படுத்துதலே புத்த மற்றும் சமண மதங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது பருப்பொருள் சார்ந்த மற்றும் இறை மறுப்பு வாதப் பண்புகள் குறித்தே அறியப்படுவதாக உள்ளது. இந்து மதத் தத்துவ இயலின் மரபு வழி வந்துள்ள ஆறு கருத்தாக்கங்களில் ஒன்றாக இது கருதப்படவில்லை எனினும், இந்து மதத்தின் உள்ளீடாக பருப்பொருள் சார்ந்த கருத்தியக்கம் என்ற அளவில் இது குறிப்பிடத்தக்கதாகும்.[14][15]