சிசெரோ
From Wikipedia, the free encyclopedia
மார்க்கசு துல்லியசு சிசெரோ (/ˈsɪs[invalid input: 'ɨ']roʊ/; பாரம்பரிய இலத்தீன்: [ˈmaːr.kʊs ˈtʊl.li.ʊs ˈkɪ.kɛ.roː]; பண்டைக் கிரேக்கம்: Κικέρων Kikerōn, ஆங்கில வடிவம் துல்லி[1] /ˈtʌli/; 3 ஜனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு உரோமானியரும் மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மன்ற உறுப்பினரும், அரசியலமைப்பாளரும் ஆவார்.. இவர் உரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக உரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.[2][3]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
சிசெரோ (MARCUS TULLIUS CICERO) | |
---|---|
கி.பி முதல் நூற்றாண்டுச் சிசெரோவின் சிலை, கேப்பிட்டோலினே அருங்காட்சியகம், உரோம் நகர் | |
மன்ற உறுப்பினர், உரோமக் குடியரசு | |
பதவியில் கி.மு63–கி.மு63 Serving with கையசு அண்டோனியசு கைபிரிடா | |
முன்னையவர் | உலூசியசு ஜூலியசு சீசர், கையசு மார்சியசு ஃபிகுலசு |
பின்னவர் | டெசிமசு ஜூனியசு சிலானசு, உலூசியசு இலிசினசு முரேனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px 3 January 106 BC ஆர்ப்பினம், உரோமக் குடியரசு (இக்கால ஆர்ப்பினோ, இலாசியோ, இத்தாலி) |
இறப்பு | 7 திசம்பர் கி.மு43 (அகவை 63) ஃபோர்மியா, உரோமக் குடியரசு |
இளைப்பாறுமிடம் | 200px |
தேசியம் | உரோமானியர் |
அரசியல் கட்சி | Optimate |
பெற்றோர் |
|
வேலை | அரசியலாளர், வழக்கறிஞர், சொற்பொழிவாளர், மெய்யியலாளர், கவிஞர் |
சிசெரோ | |
---|---|
கருப்பொருள் | அரசியல், சட்டம், மெய்யியல், யாப்பியல் |
இலக்கிய இயக்கம் | இலத்தீனப் பொற்காலம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சொற்பொழிவுகள்: In Verrem, In Catilinam I-IV, Philippicae Philosophy: De Oratore, De Re Publica, De Legibus, De Finibus, De Natura Deorum, De Officiis |
இலத்தின் மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தீனில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பீன்னாட்களில் 19ஆம் நூற்றாண்டுவரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது..[4] Michael Grant அவர்களின் கூற்றுப்படி,சிசெரோவைப் போல "வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ணவோட்டத்திலும் செலுத்தியதில்லை".[5] சிசெரோ கிரேக்க மெய்யியலின் முதன்மையான சிதனைப்பள்ளிகலையுமுரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை இலத்தின மொழியில் உருவாகினார். காட்டாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி செவ்வியல் இலத்தீன் மொழியை வளப்படுத்தினார்.[6] இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் எனவெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர்பெற்றார்.
இவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையகும். உரோம வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்ருகளை அளித்து வருகின்றன. குறிப்பாக உரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.[7]