சுங்கை பட்டாணி
From Wikipedia, the free encyclopedia
சுங்கை பட்டாணி (மலாய்: Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani; சீனம்: 双溪 农民) [1], என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் சுங்கை பட்டாணி, நாடு ...
சுங்கை பட்டாணி | |
---|---|
Sungai Petani | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°39′N 100°30′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கோலா மூடா |
நாடாளுமன்றம் | சுங்கை பட்டாணி (மக்களவை தொகுதி) |
உருவாக்கம் | கெடா: 1611 சுங்கை பட்டாணி: 1912 |
அரசு | |
• நகராட்சி | சுங்கை பட்டாணி நகராட்சி (SPMC) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 5,44,851 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 08xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6-04-4xxxxxxx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
இணையதளம் | http://www.mpspk.gov.my/ |
மூடு
மலேசிய மொழியில் ’சுங்கை’ (Sungai) என்றால் ஆறு; ’பட்டாணி’ (Petani) என்றால் விவசாயி; சுங்கை பட்டாணி என்றால் விவசாயின் ஆறு என்று பொருள் படும். தீபகற்ப மலேசியாவின் வடக்கே தாய்லாந்து நாட்டிற்கு அருகாமையில் கெடா மாநிலம் உள்ளது.