சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தடுக்கும் முறைகள் / From Wikipedia, the free encyclopedia
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. 1960களிலிருந்து, சுற்றுச் சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச் சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச் சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.
சுற்றுச் சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப் பிணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகள் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச் சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச் சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்பு கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுச்சூழலைப் பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.[1]