செலம் போர்
மாவீரன் அலெக்சாண்டரின் யுத்தம் / From Wikipedia, the free encyclopedia
செலம் போர் ( Battle of the hydaspes) மாவீரன் அலெக்சாண்டர் கிமு 326 இல் பௌரவ ராஜ்யத்தின் அரசன் போரசுக்கு எதிராக செல நதிக்கரையில் நடத்திய யுத்தம் ஆகும். இந்நதி இப்பொழுது ஜீலம் ஆறு என அழைக்கப்படுகிறது. இப்பகுதி தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. போரில் கிரேக்கர்கள் வென்று பஞ்சாப் பகுதியை மாசிடோனிய ராஜ்யத்தில் இணைத்தனர். ஏற்கனவே இணைக்கப்பட்ட பெர்சிய ராஜ்யத்தின் கிழக்கு எல்லையை விரிவு செய்யும் பொருட்டு ஏற்பட்ட இந்த யுத்தம் இந்தியாவில் கிரேக்க கலாச்சாரம் புக வழிவகை செய்தது.
விரைவான உண்மைகள் செலம் போர், நாள் ...
செலம் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அலெக்சாந்தரின் போர்களின் ஒரு பகுதி | |||||||||
ஹைட்ஸ்பஸ் போரை சித்தரிக்கும் ஆண்ட்ரே காபிரியேயின் ஓவியம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மாக்கெடோனியா ஹெலனிக் லீக் பாரசீக கூட்டாளிகள் இந்தியக் கூட்டாளிகள் | பௌரவர் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அலெக்சாண்டர் கிராடிரஸ் கொயினஸ் ஹிபோஸ்டின் தாலமி பெர்டிகாசு செலூக்கஸ் நிக்காத்தர் லிசிமச்சூஸ் டிமோனிகஸ் பியுசிஸ்டஸ் டக்சிலெஸ் | போரஸ் மற்றவர்கள் தெரியவில்லை |
||||||||
பலம் | |||||||||
40,000 காலாட்படை, 5,000 முதல் 7,000[3] குதிரைப் படை, ஆசியாவைச் சேர்ந்தவர்கள்[4] | 20,000,[5] 30,000[6] அல்லது 50,000[7] காலாட்படை, 2,000[5] முதல் 4,000 வரை[6] குதிரைப்படை, 200,[6] 130[7] ("likeliest" according to Green),[8] or 85[9] போர் யானைகள், 1,000 இரதங்கள்.[10] |
||||||||
இழப்புகள் | |||||||||
அலெக்சாந்தரின் போஸ்ஃபேலஸ் என்றும் குதிரை போரில் காயமடைந்தது, 800–7000 காலாட்படை, 2300[11]–2800[12] குதிரைப்படை கொல்லப்பட்டனர். சமீபத்திய மதிப்பீடு ~10000 கொல்லப்பட்டிருக்கலாம்.[13] | 12000 பேர் கொல்லப்பட்டனர், 9000 வீரர் பிடிக்கப்பட்டனர், அல்லது 20,000 காலாட்படை மற்றும் 3,000 குதிரைப் படையினர் கொல்லப்பட்டனர். |
மூடு
அலெக்சாண்டர் வெள்ளம் மிகுந்த நதியை தாண்டி போரஸின் படையை பக்கங்களில் இருந்து தாக்கியது சிறந்த போர் வியூகமாக கருதப்படுகிறது.[14] ஆனால் போரில் கிரேக்கர்கள் மிக்க சேதத்துடனே வென்றனர்.[15] அலெக்சாண்டர் போரசை ஆளுனராக நியமித்தான்.