திருமூலர்
சைவ சமய 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். / From Wikipedia, the free encyclopedia
திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்.[2][3] திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 5000 வருடங்களுக்கு முந்தயது எனினும் இவரால் அருளப்பட்ட திருமந்திரமாலை பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் பொ.ஊ. என்று கூறுகின்றனர். இது 3000 பாடல்களைக் கொண்டது.[4] இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
விரைவான உண்மைகள் திருமூலர், பெயர்: ...
திருமூலர் | |
---|---|
பெயர்: | திருமூலர் |
குலம்: | இடையர் |
பூசை நாள்: | ஐப்பசி அசுவினி |
அவதாரத் தலம்: | சாத்தனூர் |
முக்தித் தலம்: | திருவாவடுதுறை [1] |
மூடு