திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12 ஆக இருந்தது. 87-லிருந்து, 96 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், மைலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்குப் பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டது[1].