நிரல் மொழி
நிரல் ஏற்பு மொழி என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக / From Wikipedia, the free encyclopedia
நிரல்தொடுப்பு மொழி (Programming language) அல்லது நிரலாக்க மொழி என்பது ஒரு குறியீட்டு மொழியாகும். இது பலவகை வெளியீடுகளை உருவாக்கப் பயன்படும் கட்டளைகளின் கணத்தைத் தரும். நிரலாக்க மொழிகள் பொதுவாக, கணினிக்கு எந்திரக் கட்டளைகளைத் தரும். இவை குறிப்பிட்ட அல்கோரிதங்களைச் செயற்படுத்தும் நிரல்களை உருவாக்கப் பயன்படும்.
நிரல்தொடுப்பு மொழி என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல்பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் மொழியைக் கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிரல் மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றவாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தைப் பயன்படுத்தலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் (robot) , கணிப்பான் (calculator), கணினி போன்றவை ஆகும்.
இலக்கவியல் கணினி தோன்றுவதற்கு முன்பே மிகப்பழைய நிரலாக்க எந்திரம் தோன்றிவிட்டது. தன்னியக்கக் குழல் மீட்டி 9 ஆம் நூற்றாண்டில் பாக்தாதைச் சேர்ந்த மூசா உடன்பிறப்புகளால் விவரிக்கப்பட்டுள்ளது[1] 1800களின் தொடக்கத்தில் ஜேக்குவார்டு தறிகளை நெறிப்படுத்தவும் பியானோ போன்ற பல்லிய இசைக்கருவிகளை மீட்டவும் நிரல்கள் பயன்பட்டுள்ளன.[2] கணினிப் புலத்தில் பல்லாயிரம் நிரல் மொழிகள் படைக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் ஒவ்வோராண்டும் இன்னமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.பல நிரல் மொழிகளுக்குக் கணக்கீடுகள் தெளிவான வடிவத்தில் குறிப்பிடவேண்டியது கட்டயமாக தேவைப்படுகிறது (அதாவது, செய்யவேண்டிய கணிதவினைகளின் வரிசைமுறை தெளிவாகத் தரப்படவேண்டும்) ஆனால், பிற நிரல் மொழிகளோ, நிரல் குறிப்பீட்டின் வேண்டப்படும் முடிவு அறிவித்தல் போன்ற மற்ற வடிவங்களைப் பயன்படுத்துகின்றன (அதாவது வேண்டப்படும் முடிவுகள் குறிப்பிடப்படுகின்றனவே ஒழிய அவற்றை எப்படி அடைவது என்பது குறிப்பிடப்படுவதில்லை).
நிரலாக்க மொழி விவரிப்பு, தொடரன் வடிவம், பொருண்மை வடிவம் என இரண்டு உறுப்புகளாகப் பகுக்கப்படுகிறது. சில மொழிகள் தரக்குறிப்பு ஆவணங்களால் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, சி நிரல் மொழி பன்னாட்டுச் செந்தர நிறுவனத்தின் செந்தரத்தால் வரையறுக்கப்படுகிறது. பெர்ள் போன்ற வேறு சில மொழிகளோ ஓங்கலாக மேற்கோள் நடைமுறைப்படுத்தலை மட்டுமே பயன்படுத்துகின்றன. சிலமொழிகளோ இருவகையையும் பயன்படுத்துகின்றன. பேசிக் மொழி செந்தரம், ஓங்குநிலை நடைமுறைப்படுத்தல் விரிவாக்கம் இரண்டாலும் வரையறுக்கப்படுகிறது.
நிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாக கொடுத்த பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டை பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.
மேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம்.