பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம்
From Wikipedia, the free encyclopedia
பலதொகுதிமரபு (polyphyly) (கிரேக்கத்தில் "பல்லினத்தின்" எனப் பொருள்) சார்ந்த குழு, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒற்றைப் பண்பகவகைகளின்: மரபுவகைகளின் ஒருங்கு படிமலர்ச்சியால் ஏற்பட்ட பான்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலை அவற்றின் ஒருங்குதலாலோ அல்லது அவற்றில் ஒன்றின் மீள்திரும்புதலாலோ ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை ஒரு பொதுமூதாதையில் இருந்து உருவாவதில்லை. மாற்றாக, பலதொகுதிமரபின ஒருங்குதல் நிகழ்வு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பன்மூதாதையர்வழித் தோன்றியதையே அது குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக வெங்குருதி விலங்குகளின் குழு பலதொகுதி மரபினதாகும். ஏனென்றால் இவை பறவைகள், பாலூட்டிகள் ஆகிய இரண்டு தொகுதிகளின் பான்மைகளையும் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் இவற்றின் பொது மூதாதை குளிர்குருதி இனமாக இனங்காணப் பட்டுள்ளது.[1] பறவைகள், பாலூட்டிகளின் மூதாதைகளில் வெங்குருதி இயல்பு தனித்தனியாக படிமலர்ந்துள்ளது. பலதொகுதிமரபினத்துக்கான அடுத்த எடுத்துகாட்டு முதலுயிரிகளும் பூஞ்சைகளும் ஆகும்.
உயிரியலார் பலர் சிறப்பினங்களைக் குழுவாக்குவதில் ஈரினங்களின் ஒருங்குபான்மைகளை ஏற்பதில்லை.பெரும்பாலும் அவர்களின் இலக்கு பலதொகுதிமரபினங்களைத் தவிர்ப்பதற்கே முனைகிறது. இது வகைபாட்டுத் திட்டங்களின் பேரளவுத் திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது.
வகைபாட்டைவிட சூழலியலை முதன்மையாக்க் கருதும் ஆய்வாளர்கள் பலதொகுதிமரபுக் குழுக்களை சரியானக் கருப்பொருளாக ஏற்கின்றனர். எனவே அவர்கள் ஆல்டெர்நாரியா என்ற பூஞ்சையினத்தின் ஒருங்குபான்மைகளைக் கருத்தில் கொண்டு அதை பலதொகுதிமரபினமாக ஏற்பதோடு பேரினமாகவும் வகைப்படுத்துகின்றனர்.[2]