பிக்குகள்
From Wikipedia, the free encyclopedia
புத்த பிக்குகள் பௌத்தம் உலகம் முழுக்க பரவுவதற்குக் காரணமாயிருந்தவர்கள். பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும் சுய மறுப்பையும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆகையால் புத்த பிக்குகளுக்கு பல்வேறு கடினமான பயிற்சிகளை புத்தம் அறிமுகப்படுத்தியது.
நான்கு விசயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.
- ஆண்-பெண் கலவி கூடாது.
- புல்லைக் கூட திருடக் கூடாது.
- உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
- இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.
துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிச்சைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும். புத்த பிக்குகளைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும். புத்த பிச்சைகள் என்பதே மருவி புத்த பிக்குகள் என மாறியிருக்க வேண்டும்[1].