![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/%25E0%25A4%25AC%25E0%25A4%25BF%25E0%25A4%25B9%25E0%25A4%25BE%25E0%25A4%25B0_%25E0%25A4%25A6%25E0%25A4%25BF%25E0%25A4%25B5%25E0%25A4%25B8.jpg/640px-%25E0%25A4%25AC%25E0%25A4%25BF%25E0%25A4%25B9%25E0%25A4%25BE%25E0%25A4%25B0_%25E0%25A4%25A6%25E0%25A4%25BF%25E0%25A4%25B5%25E0%25A4%25B8.jpg&w=640&q=50)
பீகார் நாள்
From Wikipedia, the free encyclopedia
பீகார் தினம் (𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮)[1] என்பது பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாளாகும். 1912 ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து இந்த மாநிலத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.[2][3] இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] நிதிஷ்குமார் ஆட்சிக்காலத்தில் பீகார் தினம் பீகார் அரசாங்கத்தால் துவங்கப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவைத் தவிர அமெரிக்க ஐக்கிய நாடு , ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி[5], இசுக்கொட்லாந்து[6], ஆத்திரேலியா, கனடா, பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் மொரிசியசு போன்ற நாடுகளிலும் பீகார் தினம் கொண்டாடப்படுகின்றது]].[7]