புலி
பாலூட்டிகளிலுள்ள ஒரு வேட்டை விலங்கு / From Wikipedia, the free encyclopedia
புலி (பாந்தெரா டைக்ரிஸ்; Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள ஒரு இனமாகும். பூனைகுடும்பத்திலேயே உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது, இதன் பூனைகுடும்பத்தில் உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது செம்மஞ்சள் நிற மேற்தோலுடன் கருப்புக் நிற கோடுகளுடன் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் போன்ற தாவர உண்ணிகளை வேட்டையாடுகின்றன. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் சமூக விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலி | |
---|---|
வங்காளப் புலி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெரும்பூனை |
இனம்: | புலி |
இருசொற் பெயரீடு | |
Panthera tigris பாந்தெரா டைகிரிஸ் (லின்னேயஸ், 1758) | |
துணையினம் | |
வங்காளப் புலி | |
புலிகளின் வரலாற்றுப் பரவல் (வெளிர் மஞ்சள்) மற்றும் 2022 (பச்சை) | |
வேறு பெயர்கள் | |
Tigris striatus செவர்ட்சோவ், 1858 |
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதியில் தொடங்கி அமுர் ஆற்றின் வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாத்தில் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏறத்தாழ 93% அளவு வரை இழக்க நேரிட்டது. நாளடைவில் இவை மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு மற்றும் தெற்காசியா மற்றும் சீனா ஆகிய இடங்களில் அருகிப்போனது. தற்போது இவை உருசியாவின் சைபீரிய மிதவெப்பவலயக் காடுகள், இந்தியத் துணைக்கண்டம், தெற்காசியாவின் சில பகுதிகள் மற்றும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகள் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
புலியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான புலிகள் இந்தியாவில் வாழ்கின்றன. காடுகளின் அழிவு மற்றும் வேட்டையாடுதல் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது. அதிக மனித சனத்தொகை அடர்த்தி உள்ள நாடுகளில் மனிதர்களின் அத்துமீறல் காரணமாக புலிகளுடன் ஏற்படும் மோதல் காரணமாக இவை கொள்ளப்படுகின்றன.
புலிகள் பண்டைய புராணங்கள் மற்றும் கலாச்சாரங்களின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கியமாக இடம்பெற்றன. மேலும் இவை கொடிகள் மற்றும் விளையாட்டு அணிகளுக்கான சின்னங்கள், நவீன திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. புலியானது இந்தியா, வங்கதேசம், மலேசியா மற்றும் தென் கொரியாவின் தேசிய விலங்காக உள்ளது.