பேட்ரிக் ஆலிவெல்
இந்தியவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பேட்ரிக் ஆலிவெல் (Patrick Olivelle) ஒரு இந்தியவியலாளர் ஆவார்.[1][2] சந்நியாசம், துறவு மற்றும் தருமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சமசுகிருத இலக்கியத்தின் தத்துவவியலாளரும் அறிஞருமான ஆலிவெல் 1991 முதல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிய ஆய்வுகள் துறையில் சமசுகிருதம் மற்றும் இந்திய மதங்களின் பேராசிரியராக இருந்து வருகிறார்.[1][3]
பேட்ரிக் ஆலிவெல் | |
---|---|
பிறப்பு | 1942 இலங்கை |
பணி |
|
கல்விப் பின்னணி | |
கல்வி | |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | டெக்சாஸ் பல்கலைக்கழகம் |
இலங்கையில் பிறந்த இவர்,[3] 1972 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு சமசுகிருதம், பாளி மற்றும் இந்திய மதங்களை தாமசு பறோ, ஆர்.சி. சாக்னெர் ஆகியோரிடம் பயின்றார். [3] 1974 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து இலூடோ ரோச்சரின் மேற்பார்வையில் "யாதவப் பிரகாசரின் யதிதர்மப்பிரகாச"த்தின் விமர்சனப் பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அடங்கிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து தனது முனைவர் பட்டம் பெற்றார். [3] 1974 மற்றும் 1991-க்கு இடையில், புளூமிங்டனிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் சமய ஆய்வுகள் துறையில் கற்பித்தார். [1]