போதி மரம்
From Wikipedia, the free encyclopedia
போதி மரம் (Bodhi Tree) (சமசுகிருதம்: बोधि) என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் உள்ள அரச மரத்தைப் பௌத்தர்கள் மகாபோதி என அழைக்கிறார்கள். புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதிக் கோயிலாகப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலகப் பௌத்தர்களாலும் புனித மரமாக வணங்கப்படுகிறது.[1]