From Wikipedia, the free encyclopedia
மச்சமுனி (Machamuni) காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது.[1] இவரின் குருபூஜை [2](பிறந்த திருநாள்) புரட்டாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.[3]
மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான். இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.