மரகதப்புறா
தமிழ்நாட்டின் மாநில பறவை / From Wikipedia, the free encyclopedia
மரகதப் புறா (Common emerald dove), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப் பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (longirostris ) மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியிலிருந்து கேப் யார்க் தீபகற்பம் வரையிலும், கிரைசோகுலோரா (chrysochlora ) கேப் யோர்க் தீபகற்பத்திலிருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் வரையிலும் மற்றும் நார்ஃபோக் தீவிலிருந்து லார்டு ஹோவ் தீவு வரையிலும், நடலிசு (கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா) கிறிஸ்துமஸ் தீவிலும் காணப்படுகின்றன. மரகதப் புறா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது. இப்பறவை தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.[2][3] பசிபிக் மரகதப் புறா மற்றும் ஸ்டீபனின் மரகதப் புறா இரண்டும் குறிப்புடையதாகக் கருதப்பட்டன.
மரகதப்புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | சால்கோபாப்சு |
இனம்: | சா. இண்டிகா |
இருசொற் பெயரீடு | |
சால்கோபாப்சு இண்டிகா லின்னேயஸ், 1827 | |
துணையினம் | |
உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
கொலும்பா இண்டிகா |