மலேசியப் பழங்குடியினர்
From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பழங்குடியினர் (மலாய்: Orang Asli), தீபகற்ப மலேசியாவின் பூர்வீகக் குடியினர் ஆகும். பொதுவாக, இவர்களை ஒராங் அஸ்லி என்று அழைக்கின்றனர். மலேசியாவில் இந்தப் பழங்குடியினர் 18 பிரிவுகளாக இருந்தனர். இவர்களை மொழி, கலாச்சார அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மலேசியப் பழங்குடியினர் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(149,512[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா | |
மொழி(கள்) | |
ஆசிய மொழிகள் (ஆஸ்திர-ஆசியம்) பழங்குடி மலாய் மொழிகள் (ஆத்திரனேசியம்) | |
சமயங்கள் | |
ஆன்மவாதம், கிறித்துவம், இசுலாம், இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாங், செனோய், புரோட்டோ மலாய் |
மூடு
இவர்களில் செமாங் அல்லது நெகிரிட்டோ இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். செனோய் இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர். புரோட்டோ மலாய் இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மாநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கோம்பாக் நகரில் ஒராங் அஸ்லி பூர்வீகக் குடியினரின் அரும்பொருள் காட்சியகம் அமைந்து உள்ளது.