முசோரி
From Wikipedia, the free encyclopedia
முசோரி (Mussoorie) என்பது இந்தியாவின் உத்தரகண்ட மாநிலத்தின், தேராதூன் மாவட்டத்தில், தேராதூன் நகருக்கு அருகில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் நகரியம் ஆகும். இது மாநிலத் தலைநகரான தேராதூன் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவிலும், தேசியத் தலைநகரான புது தில்லிக்கு வடக்கே 290 கிமீ (180 மைல்) தொலைவிலும் உள்ளது. இந்த மலை வாழிடம் கர்வால் இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. பர்லோகஞ்ச் மற்றும் ஜாரிபானி நகரங்களைப் போலவே, இராணுவக் கண்டோன்மென்ட்டை உள்ளடக்கிய லண்டூர் நகரமும் "பெரிய முசோரியின்" பகுதியாகக் கருதப்படுகிறது. [3]
முசோரி
Mansūrī | |
---|---|
அடைபெயர்(கள்): மலைகளின் அரசி | |
ஆள்கூறுகள்: 30.45°N 78.08°E / 30.45; 78.08 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | தோராதூன் |
ஏற்றம் | 2,005 m (6,578 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 30,118 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி[1] |
• பிற | கர்வாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 248179[2] |
வாகனப் பதிவு | UK 07, UK 09 |
முசோரி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2,005 மீட்டர்கள் (6,578 அடி) ) உயரத்தில் உள்ளது. இதன் வடகிழக்கில் இமயமலைப் பனித் தொடர்களும், தெற்கே டூன் பள்ளத்தாக்கு மற்றும் சிவாலிக் மலைத் தொடர்களும் உள்ளன. 2,275 மீ (7,464 அடி) உயரம் கொண்ட லண்டூரில் உள்ள அசல் லால் திப்பா இரண்டாவது மிக உயர்ந்த இடம் ஆகும். முசோரி மலைகளின் ராணி என்று பிரபலமாக அறியப்படுகிறது. [4] [5]