முப்தி முகமது சயீத்
From Wikipedia, the free encyclopedia
முப்தி முகமது சயீத் (Mufti Mohammad Sayeed, காஷ்மீரி: मुफ़्ती मुहम्मद सईद (தேவநாகரி), مفتی محمد سید (நஸ்தலீகு)) ( சனவரி 12, 1936 - சனவரி 7 , 2016[1]) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சுத் திங்கள் முதல் தேதியில் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.காஷ்மீர் சிக்கலுக்கான தீர்வு காண்பதில் காஷ்மீர் மக்களுடன் நிபந்தனையற்ற உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக சூலை 1999இல் ஜம்மு காஷ்மீர் மக்களின் சனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.[2]
விரைவான உண்மைகள் முஃப்தி முகமது சயீது, உள்துறை அமைச்சர் ...
முஃப்தி முகமது சயீது | |
---|---|
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | சர்தார் பூடா சிங் |
பின்னவர் | சந்திரசேகர் |
சம்மு காசுமீர் முதலமைச்சர் | |
பதவியில் நவம்பர் 2, 2002 – நவம்பர் 2, 2005 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிஜ்பெகரா, இந்தியா |
இறப்பு | சனவரி 7 , 2016 புதுதில்லி |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி (1999-நடப்பில்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1991-1999; 1987க்கு முன்பு) ஜனதா தளம் (1987-1991) |
மூடு