முளைத்தல்
From Wikipedia, the free encyclopedia
முளைத்தல் என்பது தாவரங்கள், பூஞ்சைகள் முறையே அவற்றின் வித்துக்கள் (seed), வித்திகள் (spore) இலிருந்து வெளியேறி வளரத் தொடங்கும் செயலாகும். தாவரங்கள் விதையிலிருந்து முளைவிட்டு வளர ஆரம்பிக்கும்போது, அந்த இளம் தாவரமானது நாற்று அல்லது கன்று என அழைக்கப்படும். பூக்கும் தாவரம் (Angiosperms), வித்துமூடியிலி (gymnosperm) வகைத் தாவரங்களில் அவற்றின் விதையிலிருந்து முளைத்தல் செயல் முறைமூலம் புதிய தாவரமான நாற்று உருவாகும். ஆனாலும் பூஞ்சைகளில், அவற்றின் வித்திகளில் இருந்து காளான் இழை அல்லது பூஞ்சை இழை (Hyphae) வளர ஆரம்பிக்கும் செயலும் முளைத்தல் என்று அழைக்கப்படுகிறது. பொது வழக்கில், கரு ஒன்றிலிருந்து புதிதாக ஒரு தாவரம் வளர ஆரம்பிக்கும் நிலையை முளைத்தல் என்றும் கூறலாம். இவை தவிர தாவரங்களில் பாலியல் இனப்பெருக்க முறையில், கருக்கட்டலுக்காக ஆண் பாலணுவைக் கொண்ட மகரந்தத்திலிருந்து மகரந்தக்குழாய் தோன்றி, பெண் பாலணுவான முட்டையை நோக்கி நீண்டு செல்லும் செயல்முறையும் முளைத்தல் எனப்படுகின்றது. ஒரு தாவரங்கள் விதையிலிருந்து முளைவிட்டு வளர ஆரம்பிக்கும்போது, அந்த இளம் தாவரமானது நாற்று அல்லது கன்று என அழைக்கப்படும்.