விவேகசூடாமணி (நூல்)
From Wikipedia, the free encyclopedia
விவேகசூடாமணி (ஆங்கிலம்: Vivekachudamani) (சமஸ்கிருதம்: विवेकचूडामणि) அத்வைத வேதாந்தத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது. இது அத்வைத வேதாந்த தத்துவத்தை விளக்க வந்த நூலாகும். இந்நூலில் அத்வைத வேதாந்த தத்துவங்களை எளிதாக விளக்குவதால் இதனை பிரகரண கிரந்தம் என்று வடமொழியில் அழைப்பர்.
விரைவான உண்மைகள் நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் ...
நூலாசிரியர் | ஆதிசங்கரர் (மூல நூலாசிரியர்) |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | ஸ்ரீ அண்ணா (தமிழாக்கம்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | அத்வைத வேதாந்தம் |
வெளியீட்டாளர் | இராமகிருஷ்ண மடம், சென்னை |
வெளியிடப்பட்ட நாள் | 06-01-2011 |
பக்கங்கள் | 390 |
ISBN | 81-7823-268-5 |
மூடு
இந்நூலை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உரைகளும் எழுதப்பட்டுள்ளது. விவேகசூடாமணி நூலை, ஸ்ரீ அண்ணா என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, இராமகிருஷ்ண மடம், சென்னை நிறுவனத்தால் 14-01-1971 அன்று வெளியிடப்பட்டது.[1]