பிப்ரவா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் / From Wikipedia, the free encyclopedia
பிப்ரவா (Piprahwa) வடஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் - நேபாள எல்லையில் உள்ள, சித்தார்த்தநகர் மாவட்டத்தின் பன்சி தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.
பிப்ரவா | |
---|---|
தொல்லியல் களம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவா கிராமத்தின் அமைவிடம் Show map of உத்தரப் பிரதேசம் | |
ஆள்கூறுகள்: 27.443000°N 83.127800°E / 27.443000; 83.127800 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சித்தார்த்நகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
கௌதம புத்தர் தமது 29வது அகவை வரை குடும்பத்தினருடன் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகர அரண்மனையின் தொல்பொருட்களை, தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்கள் பிப்ரவா கிராமத்தில் அகழ்ந்தெடுத்தனர்.
வாசனையுடன் கூடிய கருப்பு நிற காலாநமக் நெல் இக்கிராமத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது.[1]
கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின், அவரது உடல் குசிநகரில் எரியூட்டப்பட்டது. கௌதம புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புகளின் ஒரு பகுதியை பிப்ரவா கிராமத்தில் வைத்து, அதன் மீது கட்டப்பட்ட ஒரு பெரிய தூபியும், சிதலமடைந்த பௌத்த விகாரைகளும், 1971-1973 காலகட்டங்களில் நடைபெற்ற இந்தியத் தொல்லியல் அய்வகத்தின் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. [2]