வெர்சாய் ஒப்பந்தம்
From Wikipedia, the free encyclopedia
வெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன [1].1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது.
செருமனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம். | |
---|---|
ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம் | |
கையெழுத்திட்டது | 28 சூன் 1919 |
இடம் | வெர்சாய், பிரான்சு |
நடைமுறைக்கு வந்தது | 10 சனவரி 1920 |
நிலை | Ratification by Germany and three Principal Allied Powers. |
கையெழுத்திட்டோர் | பிரான்ஸ் இத்தாலி ஜப்பான்n ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா Other Allied Powers
|
வைப்பகம் | பிரான்ஸ் அரசு |
மொழிகள் | பிரெஞ்சு, ஆங்கிலம் |
முழு உரை | |
Treaty of Versailles விக்கிமூலத்தில் முழு உரை |
செருமனியும் அதன் கூட்டணியிலிருந்த நாடுகளும் போர்காலத்தில் ஏற்படுத்திய அனைத்து நட்டம் மற்றும் இழப்புகளுக்கு செருமனி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல விதிமுறைகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான விதிமுறையாகும். மைய சக்தியில் இடம்பெற்றிருந்த பிற உறுப்பினர்கள் இதுபோன்ற விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தனர். விதிப்பிரிவு 231 என்ற இச்சட்டப்பிரிவு பின்னாளில் போர் குற்ற உட்பிரிவு என்று அழைக்கப்பட்டது. செருமனி ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு அவர்களுக்குரிய நிலப் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், நட்புறவு நாடுகளாக உருவான சில நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செருமனியை வலியுறுத்தியது. 1921 ஆம் ஆண்டில் இந்த இழப்புக்களின் மொத்த செலவினத் தொகை 132 பில்லியன் மார்க்குகளுக்கு (அப்போதைய அமெரிக்கமதிப்பு $ 31.4 பில்லியன் அல்லது 6.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும். தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர் 442 பில்லியன் அல்லது 2017 இல் இங்கிலாந்தின் 284 பில்லியன்) சமமானதாகும். ஒப்பந்தம் மிகவும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று அந்த நேரத்தில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக பாரிசு அமைதி மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியான யான் மேனார்டு கெய்ன்சு கணித்துக் கூறினார். ஒப்பந்தம் வலியுறுத்தும் அமைதியை மிருகத்தனமான அமைதி என்று அவ்வல்லுநர்கள் கருதினர். மற்றும் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகவும் அதிகமானது என்றும் எதிர்பார்த்த அமைதிக்கு நேரெதிரான விளைவுகளை அளிக்கிறது என்றும் கூறினர். பல நாடுகளிலிருந்தும் சரித்திராசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், பிரஞ்சு மார்சல் பெர்டினாண்ட் போச் போன்ற நேச நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் செர்மனியை மிகவும் மென்மையாக நடத்துவதாகக் கருதி உடன்படிக்கையை விமர்சித்தனர்.
இத்தகைய போட்டிகளின் முடிவில் சிலசமயங்களில் வெற்றி பெற்றவர்களிடையே காணப்படும் முரண்பாடான இலக்குகளால் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு சமரசம் தோன்றியிருக்கும்:செருமனி சமாதானத்தையோ நட்பையோ விரும்பவில்லை ஆனால் அது நிரந்தரமாக பலவீனமடைந்தது. ஒப்பந்தத்தினால் எழுந்த பிரச்சினைகள் சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தன. இது செருமனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவியது. இழப்பீடுகள் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய மறுபரிசீலனைக்காக டாவசு திட்டம் என்ற புதியதிட்டம் வகுக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற லொசான் மாநாட்டில் இழப்பீடுகளை அளித்தல் காலவரையற்று தள்ளிவைக்கப்பட்டது.
இது பெரும்பாலும் "வெர்சாயில் மாநாடு" என்று குறிப்பிடப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உண்மையான கையெழுத்திடல் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் நடந்தது. பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் பாரிசில் அனைத்துலக மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பெரிய நான்கு கூட்டங்களாக நிகழ்ந்தன.