இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் இலங்கையில் விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில் மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரங்கள், தமிழர் பகுதிகளில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்பில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து 1983 ஆண்டு முதல் ஒரு உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.[1][2][3]