உயிரணு வளர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
உயிரணு வளர்ப்பு (Cell culture) என்பது ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை, உயிரணுவானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) விலங்குகளில் இருந்து பெறப்படும் உயிரணுவே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்[1], 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது[2].