குப்லாய் கான்
சீனாவின் யுவான் அரசமரபை நிறுவிய பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
குப்லாய் கான்[note 4] (23 செப்டம்பர் 1215 – 18 பெப்ரவரி 1294) என்பவர் சீனாவின் யுவான் அரசமரபை தோற்றுவித்தவர் ஆவார். இவர் யுவானின் பேரரசர் ஷிசு (Emperor Shizu of Yuan) என்ற இவரது கோயில் பெயர் மற்றும் இவரது அரச பட்டப் பெயரான செத்சென் கான் (Setsen Khan) ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறார். 1260 முதல் 1294 வரை மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது ககான்-பேரரசராகவும்[note 1] இவர் திகழ்ந்தார். எனினும், பேரரசு பிரிந்ததற்குப் பிறகு ககான் என்ற இவரது நிலையானது பெயரளவு நிலையாக மட்டுமே இருந்தது. 1271இல் இவர் அரசமரபின் பெயராக "பெரும் யுவான்"[note 5] என்ற பெயரை அறிவித்தார். 1294இல் இவரது இறப்பு வரை இவர் யுவான் அரசமரபை ஆண்டார்.
யுவானின் பேரரசர் ஷிசு 元世祖 செத்சென் கான் 薛禪汗 ᠰᠡᠴᠡᠨ ᠬᠠᠭᠠᠨ | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 5ஆம் ககான் (பேரரசு பிரிந்ததன் காரணமாக பெயரளவில் மட்டும் ககான்) சீனாவின் பேரரசர் (யுவான் அரசமரபின் முதல் பேரரசர்) | |||||||||||||||||||||
மங்கோலியப் பேரரசின் ககான்-பேரரசர்[note 1] | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 21 ஆகத்து 1264 – 18 பெப்ரவரி 1294[note 2] | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | 5 மே 1260 | ||||||||||||||||||||
முன்னையவர் | மோங்கே கான் அரிக் போகே (பிரதிநிதி மற்றும் அரியணைக்கு உரிமை கோரியவராக) | ||||||||||||||||||||
பின்னையவர் | தெமுர் கான் (யுவான் அரசமரபு) | ||||||||||||||||||||
யுவான் அரசமரபின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 18 திசம்பர் 1271 – 18 பெப்ரவரி 1294[note 3] | ||||||||||||||||||||
பின்னையவர் | தெமுர் கான் | ||||||||||||||||||||
பிறப்பு | 23 செப்டம்பர் 1215 மங்கோலியப் பேரரசு | ||||||||||||||||||||
இறப்பு | 18 பெப்ரவரி 1294 (அகவை 78) கான்பலிக், யுவான் அரசமரபு | ||||||||||||||||||||
புதைத்த இடம் | |||||||||||||||||||||
பேரரசி |
| ||||||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | சென்சின் | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | டொலுய் | ||||||||||||||||||||
தாய் | சோர்காக்டனி பெகி | ||||||||||||||||||||
மதம் | பௌத்தம் |
டொலுய் மற்றும் அவரது முதன்மையான மனைவி சோர்காக்டனி பெகியின் இரண்டாவது மகன் குப்லாய் ஆவார். இவர் செங்கிஸ் கானின் ஒரு பேரன் ஆவார். 1227இல் செங்கிஸ் கான் இறந்த போது இவருக்கு கிட்டத்தட்ட 12 வயதாகி இருந்தது. 1260இல் ககானாக இவரது அண்ணன் மோங்கேவுக்கு பிறகு இவர் பதவிக்கு வந்தார். ஆனால் 1264 வரை நீடித்திருந்த டொலுய் உள்நாட்டுப் போரில் இவரது தம்பி அரிக் போகேயை இவர் தோற்கடிக்க வேண்டி வந்தது. இந்நிகழ்வானது பேரரசு சிதறுண்டதன் தொடக்கத்தைக் குறித்தது.[5] ககானாக ஈல்கானரசில் இவர் தொடர்ந்து செல்வாக்கு கொண்டிருந்த போதிலும் கூட, குப்லாயின் உண்மையான அதிகாரமானது யுவான் பேரரசுக்குள் தான் அடங்கியிருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவான அளவில் தங்க நாடோடிக் கூட்டம் மீதும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார்.[6][7][8] அந்நேரத்தில் மங்கோலியப் பேரரசை ஒட்டு மொத்தமாக ஒருவர் கருதினால் இவரது நாடானது அமைதிப் பெருங்கடல் முதல் கருங்கடல் வரையிலும், சைபீரியா முதல் தற்போதைய ஆப்கானித்தான் வரையிலும் விரிவடைந்திருந்தது.[9]
1271இல் குப்லாய் யுவான் அரசமரபை நிறுவினார். முந்தைய சீன அரசமரபுகளில் இருந்து மரபு வழியாக வந்த அரசமரபு யுவான் என அதிகாரப்பூர்வமாக கோரினார்.[10] யுவான் அரசமரபானது தற்போதய சீனா, மங்கோலியா, கொரியா, தெற்கு சைபீரியா மற்றும் அதன் அண்டைப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் மீது ஆட்சி நடத்தியது. ககானாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார். 1279 வாக்கில் சாங் அரசமரபை யுவான் வென்ற நிகழ்வானது முடிக்கப்பட்டது. பாரம்பரிய சீனா முழுவதையும் ஆண்ட ஆன் சீனர் அல்லாத முதல் பேரரசராக குப்லாய் உருவானார்.
குப்லாயின் ஏகாதிபத்திய உருவப்படமானது யுவான் பேரரசர்கள் மற்றும் பேரரசிகளின் உருவப் படங்களின் ஒரு தொகுப்பின் பகுதியாகும். இது தற்போது தைவான் தலைநகர் தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புகளில் உள்ளது. குப்லாயின் ஏகாதிபத்திய ஆடையின் வண்ணமான வெள்ளையானது ஐந்து மூலக்கூறுகள் என்ற சீன தத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு யுவான் அரசமரபின் ஏகாதிபத்திய வண்ணமாக திகழ்ந்தது.[11]