திருச்சூர் மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருச்சூர் மாவட்டம் (மலையாளம்: തൃശ്ശൂര്) கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று ஆகும். திருச்சூர் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இது 1949 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி உருவாகப்பட்டது. 3,032 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 2,975,440 ஆகும். இத் தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51%.
விரைவான உண்மைகள்
திருச்சூர் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 10°31′N 76°13′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | திருச்சூர் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
கலெக்டர் | முனைவர். வி.கே. பேபி இ.ஆ.ப. |
மக்களவைத் தொகுதி | திருச்சூர் |
மக்கள் தொகை • அடர்த்தி |
29,75,440 (2001[update]) • 981/km2 (2,541/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3032 கிமீ2 (1171 சதுர மைல்) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-8-XXXX |
இணையதளம் | thrissur.nic.in |
மூடு