பன்னிருவர், சியா இசுலாம்
From Wikipedia, the free encyclopedia
பன்னிருவர்கள் (Twelver) (அரபு மொழி: اثنا عشرية, பாரசீக மொழி: شیعه دوازده امامی, ) சியா இசுலாமின் ஒரு பிரிவாகும். முகமது நபியின் மருமகனும் கலீபாவுமான அலீக்குப் பின்னர் வந்த 12 இமாம்களை பன்னிருவர்கள் என்பர்.[1]
பன்னிருவர் எனும் சொல் சியா இசுலாமிய சமயத்தின் 12 இமாம்களைக் குறிக்கும். திருக்குர்ஆன் மற்றும் முகமது நபி போன்ற இறைத்தூதர்கள் மற்றும் இறை வாக்காளர்களின் நற்செய்திகள் மற்றும் பன்னிரு இமாம்கள் விளக்கிய நபிமொழிகள் அடிப்படையில் இமாமிய சியா பிரிவு தத்துவங்கள் கொண்டுள்ளது.
முகமது நபிக்கு அடுத்து வந்த இப்பன்னிருவர்கள் இசுலாமிய சமூகத்தின் ஆன்மிகம் மற்றும் அரசியல் பணிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என அறியப்படுகிறது.
பன்னிருவர்களின் இறையியல் கொள்கைகளின் படி, இசுலாமிய சமூகத்தை அறவழியில் வழியில் நடத்திச் செல்வதுடன், சரியத் சட்டங்களை சமூகத்தில் நிலைநாட்டவும், அவற்றை தேவைப்படும் இடத்தில் விளக்கவும் செய்கின்றனர்.
குரானில் உள்ள வேத வாக்கியங்களை விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். மேலும் முகமது நபிகள் அருளிய சுன்னாவின் படி இசுலாமிய சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள்.[2][3][4]
ஈரான், அசர்பைசான், ஈராக், பஹ்ரைன், லெபனான் போன்ற இசுலாமிய நாடுகளில் பன்னிருவர்களைப் பின்பற்றும் சியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தியா,[5][6][7][8][9] பாகிஸ்தன், சவுதி அரேபியா,[10] யேமன், வங்காளதேசம், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நைஜிரியா, எகிப்து, சாட் மற்றும் தான்சானியா போன்ற நாடுகளிலும் சிறுபான்மையினத்தவராக உள்ளனர்.
இசுலாமிய நாடுகளில் ஈரானிய அரசு மட்டும் பன்னிருவர் (சியா இசுலாம்) நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.[சான்று தேவை]