![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Peloponnesian_war_alliances_431_BC.png/640px-Peloponnesian_war_alliances_431_BC.png&w=640&q=50)
பெலோபொன்னேசியன் போர்
பண்டைய கிரேக்க போர் / From Wikipedia, the free encyclopedia
பெலோபொன்னேசியன் போர் (Peloponnesian War, கிமு 431-404) என்பது ஏதென்சு தலைமையிலான டெலியன் கூட்டணி மற்றும் எசுபார்த்தா தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே நடந்த ஒரு பண்டைய கிரேக்கப் போர் ஆகும். வரலாற்றாசிரியர்கள் பாரம்பரியமாக இந்தப் போரை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளனர். முதல் கட்டத்தில், ஆர்க்கிடாமியன் போர், எசுபார்த்தா அட்டிகா மீது மீண்டும் மீண்டும் படையெடுப்புகளை நடத்தியது, அதே நேரத்தில் ஏதென்சு அதன் கடற்படை மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி பெலொப்பொனேசியா கடற்கரையைத் தாக்கியது. அதன் வழியாக தன் பேரரசில் அமைதியின்மையின் அறிகுறிகளை போக்க முயற்சித்தது. இந்தக் காலகட்டத்தின் கிமு 421 இல் போர் முடிவடைந்தது. அதையடுத்து நிக்கியாஸ் அமைதி உடன்பாடு கையெழுத்தானது. எவ்வாறாயினும், அந்த ஒப்பந்தம் விரைவில் பெலோபொன்னீசில் மீண்டும் மூண்ட சண்டையால் பயன்ற்று போனது. கிமு 415 இல் சிசிலியின் சிரக்கூசைத் தாக்க ஏதென்சு ஒரு பாரிய படையெடுப்பை மேற்கொள்ள படைகளை அனுப்பியது; கிமு 413 இல் முழுப் படையும் அழிக்கப்பட்டதால் தாக்குதல் படுதோல்வி அடைந்தது. இது போரின் இறுதிக் கட்டத்தை எட்ட வழிவகுத்தது. பொதுவாக இது டெசெலியன் போர் அல்லது அயோனியன் போர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டத்தில், எசுபார்த்தா அகாமனிசியப் பேரரசின் ஆதரவைப் பெற்றது. மேலும் ஏஜியன் கடல் மற்றும் ஐயோனியாவில் ஏதென்சுக்கு கப்பம் செலுத்திவந்த அரசுகளின் கிளர்ச்சியை ஆதரித்தது. அது ஏதென்சின் பேரரசை உடைத்தெறிந்தது. இறுதியில், ஏதென்சு கடற்படை மேலாதிக்கத்தை இழந்தது. ஈகோஸ்ப்பொட்டாமி சமரில் ஏதென்சின் கப்பற்படை முற்றிலுமாக அழிந்து போர் முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டில் ஏதென்சு சரணடைந்தது. அதன்பிறகு கொரிந்து, தீப்ஸ் போன்ற நகர அரசுகள் ஏதென்சை அழித்து, அதன் குடிமக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்றும் கோரின. ஆனால் அதற்கு எசுபார்த்தா மறுத்துவிட்டது.
பெலோபொன்னேசியன் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() கிமு 431 இல் பெலோபொன்னேசியன் போர் கூட்டணி. ஆரஞ்சு: ஏதெனியன் பேரரசும், அதன் நட்பு நாடுகளும்; பச்சை: எசுபார்த்தன் கூட்டணி |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
டெலியன் கூட்டணி (ஏதென்ஸ் தலைமையில்) | பெலோபொன்னேசியன் கூட்டணி (எசுபார்த்தா தலைமையில்) அகாமனிசியப் பேரரசின் ஆதரவுடன் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பெரிக்கிளீசு (இறப்பு கிமு 429 ) Cleon † Nicias ![]() ஆல்சிபியாடீசு ![]() Demosthenes ![]() | Archidamus II Brasidas † லைசாந்தர் ஆல்சிபியாடீசு ![]() |
||||||||
இழப்புகள் | |||||||||
குறைந்தது 18,070 வீரர்கள்[1] பொதுமக்களின் உயிரிழப்புகள் அறியப்படவில்லை. | தெரியவில்லை |
போர்குறித்து எழுதிய மிக முக்கியமான வரலாற்றாசிரியர்களில் ஒருவரான துசிடிடீசால் "பெலோபொன்னேசியன் போர்" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த சொல் இன்று உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. காரணம் நவீன வரலாற்றாசிரியர்களுக்கு ஏதென்சின் மீதான அனுதாபத்தின் பிரதிபலிப்பாகும். முக்கிய வரலாற்றாசிரியர் ஜே.பி.பரி குறிப்பிடுவது போல, பெலோபொன்னேசியர்கள் இதை "அட்டிகா போர்" என்று கருதியிருப்பார்கள். [2]
பெலோபொன்னேசியன் போர் பண்டைய கிரேக்க உலகத்தை மறுவடிவமைத்தது. சர்வதேச உறவுகளின் நிலையில், போர் தொடங்குவதற்கு முன்னர் கிரேக்கத்தின் வலுவான நகர அரசாக இருந்த ஏதென்சு, போரின் முடிவில் கிட்டத்தட்ட முழுமையாக கீழ்ப்படியக்கூடிய நிலைக்கு தாழ்த்தப்பட்டது. அதே நேரத்தில் எசுபார்த்தா கிரேக்கத்தின் முன்னணி சக்தியாக உருவெடுத்தது. போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் கிரேக்கம் முழுவதும் உணரப்பட்டது; ஏதென்சின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, போருக்கு முந்தைய செழுமையான நிலைக்கு மீண்டும் திரும்பவில்லை. [3] [4] போர் கிரேக்க சமுதாயத்தில் நுட்பமான மாற்றங்களையும் ஏற்படுத்தியது; சனநாயக ஏதென்சுக்கும் சிலவர் ஆட்சி எசுபார்த்தாவுக்கும் இடையிலான மோதலால், அவை மற்ற நகர அரசுகளுக்குள் தங்கள் கொள்கையை ஒத்த அரசியல் பிரிவினரை ஆதரித்தனர். அதனால் இந்தப் போரானது கிரேக்க உலகின் ஒரு பொதுவான போராக மாற்றியது.
இதற்கிடையில், பண்டைய கிரேக்கப் போரானது முதல் வரையறுக்கப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட மோதலாக இருந்தது. இது நகர அரசுகளுக்கிடையேயான ஒரு முழுமையான போராட்டமாக மாற்றப்பட்டது. இது பெரிய அளவிலான அட்டூழியங்களுடன் முடிந்தது. சமய மற்றும் பண்பாட்டு தடைகளைத் தகர்த்து, கிராமப்புறங்களின் பரந்த நிலப்பரப்புகளை அழித்து, முழு நகரங்களையும் அழித்த பெலோபொன்னேசியன் போர் கிமு ஐந்தாம் நூற்றாண்டு மற்றும் கிரேக்கத்தின் பொற்காலத்தின் வியத்தகு முடிவுக்கு வழிவகுத்தது. [5]
பெலோபொன்னேசியன் போருக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய கொரிந்தியப் போரானது (கிமு 394-386) ஏதென்சு அதன் முந்தைய மகத்துவத்தை மீண்டும் பெற உதவியது.