முப்பது கொடுங்கோலர்கள்
பண்டைய ஏதென்சின் சிலவர் ஆட்சியினர் / From Wikipedia, the free encyclopedia
முப்பது கொடுங்கோலர்கள் (Thirty Tyrants, பண்டைக் கிரேக்கம்: οἱ τριάκοντα τύραννοι , hoi triákonta týrannoi ) என்பவர்கள் கிமு 404 இல் பெலோபொன்னேசியப் போரில் ஏதென்சு தோல்வியடைந்த பின்னர் அங்கு நிறுவப்பட்ட எசுபார்த்தன் சார்பு சிலவர் ஆட்சியினர் ஆவர். எசுபார்த்தன் தளபதி லைசாந்தரின் அறிவுருத்தலின், ஆதரவின் பேரில், முப்பது பேரும் இணைந்து ஒரு சட்டமன்றக் குழுவாக மட்டும் அல்லாமல், ஒரு கொடுங்கோல் அரசாங்கமாகத்தையும் நிறுவினர் . [1] முப்பது கொடுங்கோலர்களால் எட்டு மாதங்கள் மட்டுமே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. குறைந்த காலமே இருந்தாலும், அவர்களின் ஆட்சியின் விளைவாக ஏதெனியன் மக்கள் தொகையில் 5% பேர் கொல்லப்பட்டனர், குடிமக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் சனநாயக ஆதரவாளர்கள் நாடுகடத்தப்பட்டனர். [2] அவர்களின் கொடூரமான மற்றும் அடக்குமுறை ஆட்சியினால் அவர்கள் "முப்பது கொடுங்கோலர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கிரிடியாஸ், தெரமீன்ஸ் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தனர். [3]