மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை
யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஓர் அணை. / From Wikipedia, the free encyclopedia
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்பது யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஓர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்[1].
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை | |
---|---|
செப்டம்பர் 2009இல் | |
அதிகாரபூர்வ பெயர் | 长江三峡水利枢纽工程 |
நாடு | China |
அமைவிடம் | Sandouping, Yiling, Hubei |
நோக்கம் | Power, flood control, navigation |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | டிசம்பர் 14, 1994 |
திறந்தது | 2008 |
கட்ட ஆன செலவு | ¥180 billion (US$26 billion) |
உரிமையாளர்(கள்) | China Yangtze Power (subsidiary of China Three Gorges Corporation) |
அணையும் வழிகாலும் | |
வகை | புவியீர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | யாங்சி ஆறு |
உயரம் | 181 m (594 அடி) |
நீளம் | 2,335 m (7,661 அடி) |
அகலம் (உச்சி) | 40 m (131 அடி) |
அகலம் (அடித்தளம்) | 115 m (377 அடி) |
வழிகால் அளவு | 116,000 m3/s (4,100,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மூன்று ஆழ்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 39.3 km3 (31,900,000 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1,000,000 km2 (390,000 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 1,045 km2 (403 sq mi) |
அதிகபட்சம் நீளம் | 600 km (370 mi) |
அதிகபட்சம் அகலம் | 1.1 km (0.68 mi) avg. |
இயல்பான ஏற்றம் | 175 m (574 அடி) |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2003–2012 |
வகை | வழக்கமான |
சுழலிகள் | 32 × 700 MW 2 × 50 MW Francis-type |
அணைக் கட்டமைப்பு 2006இல் கட்டி முடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26ஆவது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியைத் தவிர மூலத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கி்கள் 2012ஆம் ஆண்டுக்கு முன் முழு செயல்பாட்டுக்கு வராது. அணையின் 32 முதன்மை மின்னியக்கிகளையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்தத் திறன் 22.5 கிகாவாட் ஆகும்.
இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.[2]. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.[3]