வீரசிங்கம் ஆனந்தசங்கரி
From Wikipedia, the free encyclopedia
வீரசிங்கம் ஆனந்தசங்கரி (பிறப்பு: 15 சூன் 1933) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார்.
விரைவான உண்மைகள் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணி ...
வீரசிங்கம் ஆனந்தசங்கரி | |
---|---|
தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2002 | |
முன்னையவர் | மு. சிவசிதம்பரம் |
இலங்கை நாடாளுமன்றம் for கிளிநொச்சி | |
பதவியில் 1970–1983 | |
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் | |
பதவியில் 2000–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 15, 1933 (1933-06-15) (அகவை 90) பருத்தித்துறை, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
முன்னாள் கல்லூரி | ஹார்ட்லி கல்லூரி சாகிரா கல்லூரி, கொழும்பு |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | வீ. ஆனந்தசங்கரி |
மூடு
ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்த ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு வழங்கப்பட்டது.