இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015
From Wikipedia, the free encyclopedia
2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2015 Sri Lankan parliamentary election) 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில் இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகவுள்ளனர்.[3][4][5] 2015 சூன் 26 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[6] தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[7][8][9][10]
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 11,166,975 (77.66%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1] 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.[11] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும்,[11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.[11] மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[12] (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின.