ஈப்போ தொடருந்து நிலையம்
மலேசிய நாட்டிலுள்ள தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
ஈப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Ipoh Railway Station, மலாய்: Stesen Keretapi Ipoh); சீனம்: 怡保火车站) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
ஈப்போ தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | 30100, ஈப்போ, மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°35′50″N 101°04′24″E | |||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 4 நடை மேடைகள் | |||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 9 | |||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் |
| |||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||||||||||||
கட்டடக் கலைஞர் | ஆர்தர் பெனிசன் அப்பேக் | |||||||||||||||||||||||||||||||||||
கட்டடக்கலை நடை | மூரிஷ் மறுமலர்ச்சி கட்டிடக்கலை இந்தோ சரசனிக் பாணி | |||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1917 | |||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2008 | |||||||||||||||||||||||||||||||||||
பயணிகள் | ||||||||||||||||||||||||||||||||||||
பயணிகள் | * 1 பயணம் = 6 பெட்டிகள்
| |||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
|
இந்த நிலையத்திற்கு பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பேராக் மாநிலத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் மற்றும் சரக்குத் தொடருந்துகளைக கையாளும் முனையமாகவும் செயல்படுகிறது.[1]
இந்த நிலையம் ஆர்தர் பெனிசன் அப்பேக் (Arthur Benison Hubback) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தற்போதைய நிலையம் அதிகாரப்பூர்வமாக 1917-இல் திறக்கப்பட்டது. ஈப்போவின் தாஜ் மகால் (Taj Mahal of Ipoh) என்று அதன் உள்ளூர் மக்களால் அன்பாக அழைக்கப்படுகிறது.[2][1]