கோலாலம்பூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Lumpur Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Lumpur; ஜாவி: ستيسين كريتاڤي كوالا لومڤور; சீனம்: 吉隆坡火车总站) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். மலேசிய வரலாற்றில் பற்பல வரலாற்றுத் தடங்களைப் பதித்த முன்னோடி தொடருந்து நிலையமாக விளங்குகிறது. மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடருந்து நிலையங்களில் இதுவே மிகவும் புகழ்பெற்ற நிலையமாகும். தொடருந்து உலகில் ஒரு தாஜ் மகால் என இந்த நிலையம் புகழாரம் செய்யப்படுகிறது.[1][2]
விரைவான உண்மைகள் KA02 கோலாலம்பூர் தொடருந்து நிலையம் Kuala Lumpur Railway Station, பொது தகவல்கள் ...
மூடு
1886-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நிலையத்திற்குப் பதிலாக, 1910-இல் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. 1915-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கோலாலம்பூரின் முதன்மைத் தொடருந்து சந்திப்பாக விளங்கியது.[3][4]