கல்கா ஆற்று யுத்தம்
மங்கோலியப் பேரரசு மற்றும் உரூசு கூட்டணிக்கிடையே நடுக்காலத்தில் நடைபெற்ற ஓர் யுத்தம் / From Wikipedia, the free encyclopedia
கல்கா ஆற்று யுத்தம் (உக்ரைனியன்: Битва на річці Калка, உருசியம்: Битва на реке Калке)[1][2] என்பது மங்கோலியப் பேரரசின் செபே மற்றும் சுபுதையின் இராணுவங்கள் மற்றும், பல்வேறு உரூசு வேள் பகுதிகளின் கூட்டமைப்பிற்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். கீவ், கலிசியா-வோலினியா மற்றும் குமன்கள் ஆகியோர் உரூசு வேள் பகுதிகளில் அடங்குவர். அவர்கள் தைரிய மிசுதிலாவ் மற்றும் கீவின் மூன்றம் மிசுதிலாவ் ஆகியோரின் தலைமையில் போரிட்டனர். இந்த யுத்தமானது மே 31, 1223 ஆம் ஆண்டு உக்ரைனின் தற்கால தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள கல்கா ஆற்றின் கரையில் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் தீர்க்கமான வெற்றியை பெற்றனர்.
கல்கா ஆற்று யுத்தம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் கீவ உரூசு மீதான படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||
மங்கோலியக் குதிரை வில்லாளர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மங்கோலியப் பேரரசு புரோதினிசி | கீவ் வேள்பகுதி கலீசிய-வோலினிய வேள்பகுதி செர்னிகோவ் வேள்பகுதி சுமோலென்சுக் வேள்பகுதி குமன்கள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
செபே சுபுதை புலோசுகனீயா | துணிவான மிசுதிலாவ் மூன்றாம் மிசுதிலாவ் (கைதி) கலீசியாவின் டேனியல் (காயம்) இரண்டாம் மிசுதிலாவ் சுவையாடோசுலாவிச் † கான் கோதன் |
||||||
பலம் | |||||||
20,000–23,000 வீரர்கள்[1][2] | 8,000–80,000[3][4][5][6][7][8] | ||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | கூட்டணிப் படையில் 60~–90% பேர் கொல்லப்பட்டனர்.[9] |
மங்கோலியர்களின் நடு ஆசிய படையெடுப்பு மற்றும் இறுதியாக குவாரசமிய பேரரசின் வீழ்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு தளபதிகள் செபே மற்றும் சுபுதை தலைமையிலான ஒரு மங்கோலிய படையானது ஈராக்-இ அஜம் பகுதிக்கு முன்னேறியது. செபே மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானிடம் காக்கேசியா வழியாக முதன்மை ராணுவத்துடன் திரும்ப இணைவதற்கு முன் தங்களது படையெடுப்புகளை சிலவருடங்களுக்கு தொடர அனுமதி கோரினர். செங்கிஸ்கானின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில், இருவரும் சார்சியா ராச்சியம் மீது ஒரு சோதனை ராணுவ ஓட்டத்தை நடத்தி தாக்கினர். போர் பயணத்தை மேற்கொள்ள இருவருக்கும் செங்கிஸ்கான் அனுமதி வழங்கினார். காக்கேசிய வழியாக சென்றவர்கள் முதலில் காக்கேசிய பழங்குடியினரின் ஒருங்கிணைந்த ராணுவத்தை தோற்கடித்தனர். பின்னர் குமன்களை தோற்கடித்தனர். குமன் கான் தனது மருமகன் கலிசியா-வோலினியாவின் இளவரசனான தைரிய மிசுதிலாவின் அவைக்கு தப்பித்து ஓடினார். மங்கோலியர்களை எதிர்த்துப் போர் புரிய உதவுவதற்கு அவரை சம்மதிக்க வைத்தார். தைரிய மிசுதிலாவ், கீவின் மூன்றாம் மிசுதிலாவ் உள்ளிட்ட உரூசு இளவரசர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
ஒருங்கிணைந்த உரூசு இராணுவமானது முதலில் மங்கோலியர்களின் முன்வரிசை படையை தோற்கடித்தது. உரூசு ராணுவம் தோற்று ஓடுவது போல் நடித்த மங்கோலியர்களை துரத்தியது. பல நாட்களுக்கு இவ்வாறு துரத்தினர். இதன் காரணமாக உரூசு இராணுவமானது பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு இருந்தது. மங்கோலியர்கள் பிறகு கல்கா ஆற்றின் கரையில் யுத்த அணிவகுப்பில் நின்றனர். தைரிய மிசுதிலாவ் மற்றும் அவரது கூட்டாளிகள் எஞ்சிய ராணுவத்திற்காக காத்திருக்காமல் மங்கோலியர்களை தாக்கினர். தோற்கடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த குழப்பத்தில் மற்ற பல இளவரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கீவின் மிசுதிலாவ் ஒரு அரண் நிறைந்த முகாமிற்கு பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்தவர் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பான வழி திரும்பிச்செல்ல கிடைக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சரணடைந்தார். எனினும் சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அவர்களை கொன்றனர். கீவின் மிசுதிலாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். தைரிய மிசுதிலாவ் தப்பித்தார். மங்கோலியர்கள் ஆசியாவிற்கு திரும்பினர். அங்கு அவர்கள் செங்கிஸ்கானுடன் இணைந்தனர்.