சிக்கந்தர் லௌதியின் கல்லறை
கல்லறை / From Wikipedia, the free encyclopedia
சிக்கந்தர் லௌதியின் கல்லறை (Tomb of Sikandar Lodi) என்பது இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள லௌதி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரானசிக்கந்தர் லௌதியின் (ஆட்சி: 1489-1517 பொ.ச.) கல்லறை ஆகும்.[1] இந்த கல்லறை தில்லியில் உள்ள லௌதி தோட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது பொ.ச 1517-1518 இல் அவரது மகன் இப்ராகிம் லௌதியால் கட்டப்பட்டது.[2] இந்த நினைவுச்சின்னம் பாரா கும்பத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதி முன்பு கைர்பூர் என்ற கிராமமாக இருந்தது.[1]
விரைவான உண்மைகள் சிக்கந்தர் லௌதியின் கல்லறை, வகை ...
சிக்கந்தர் லௌதியின் கல்லறை | |
---|---|
லௌதி தோட்டத்தில் அமைந்துள்ள சிக்கந்தர் லௌதியின் கல்லறை | |
வகை | நினைவுச் சின்னம் & கல்லறை |
அமைவிடம் | லௌதி தோட்டம் |
ஆள்கூற்றுகள் | 28°35′46.5324″N 77°13′17.6340″E |
கட்டப்பட்டது | 1517–1518 பொ.ச. |
கட்டிட முறை | இஸ்லாமியக் கட்டிடக்கலை & இந்தியக் கட்டிடக் கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் & புது தில்லி மாநகராட்சி மன்றம் |
உரிமையாளர் | தில்லி அரசு |
Invalid designation | |
அலுவல் பெயர் | சிக்கந்தர் லௌதியின் கல்லறை |
தெரியப்பட்டது | 9 ஏப்ரல் 1936 |
உசாவு எண் | N-DL-75 |
மூடு