செரார் மூரு
From Wikipedia, the free encyclopedia
செரார் ஆல்பர்ட் மூரு (Gérard Albert Mourou, பிரெஞ்சு மொழி: [ʒeʁaʁ muʁu]; பிறப்பு: சூன் 22, 1944) என்பவர் பிரெஞ்சு அறிவியலாளரும், மின்பொறியியல், சீரொளி ஆகிய துறைகளில் முன்னோடியும் ஆவார். குற்றொலித் துடிப்பு மிகையாக்கம் எனும் வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், டோனா இசுட்ரிக்லாண்ட் என்பவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் கண்டுபிடித்த வழிமுறை மூலம் உயர்ச் செறிவு (டெராவாட்டு) கொண்ட மீக்குறுஞ்சீரொளித் துடிப்புகள் உருவாக்கப் பயன்பட்டன.[1]
விரைவான உண்மைகள் செரார் மூருGérard Mourou, பிறப்பு ...
செரார் மூரு Gérard Mourou | |
---|---|
2015 இல் செரார் மூரு | |
பிறப்பு | செரார் ஆல்பர்ட் மூரு சூன் 22, 1944 (1944-06-22) (அகவை 79) ஆல்பர்ட்வில், பிரான்சு |
பணியிடங்கள் | ஏக்கொல் பல்தொழில்நுட்பக் கழகம் என்சுடா பார்சிருடெக் இரோசெச்டர் பல்கலைக்கழகம் மிச்சிகன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | குற்றொலித் துடிப்பு மிகையாக்கம் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018) |
மூடு