சேரர்
From Wikipedia, the free encyclopedia
சேரர் எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூறம். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.[1]
சேர நாடு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 500–பொ.ஊ. 1102 | |||||||
கொடி | |||||||
தலைநகரம் | வஞ்சி மற்றும் கரூர் | ||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ், மலையாளம் | ||||||
சமயம் | வைணவம், சைவ சமயம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
வரலாற்று சகாப்தம் | சங்க காலம், மத்திய காலம் | ||||||
• தொடக்கம் | பொ.ஊ.மு. 500 | ||||||
• இரண்டாம் சேரர்கள். | பொ.ஊ. 800 | ||||||
• முடிவு | பொ.ஊ. 1102 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
சேர மன்னர்களின் பட்டியல் | |
---|---|
கடைச்சங்க காலச் சேரர்கள் | |
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் | பொ.ஊ. 45-70[சான்று தேவை] |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | பொ.ஊ. 71-129[சான்று தேவை] |
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | பொ.ஊ. 80-105[சான்று தேவை] |
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | பொ.ஊ. 106-130[சான்று தேவை] |
சேரன் செங்குட்டுவன் | பொ.ஊ. 129-184[சான்று தேவை] |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | பொ.ஊ. 130-167[சான்று தேவை] |
அந்துவஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
மாந்தரஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
வாழியாதன் இரும்பொறை | பொ.ஊ. 123-148[சான்று தேவை] |
குட்டுவன் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
பெருஞ்சேரல் இரும்பொறை | பொ.ஊ. 148-165[சான்று தேவை] |
இளஞ்சேரல் இரும்பொறை | பொ.ஊ. 165-180[சான்று தேவை] |
பெருஞ்சேரலாதன் | பொ.ஊ. 180[சான்று தேவை] |
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
குட்டுவன் கோதை | பொ.ஊ. 184-194[சான்று தேவை] |
மாரிவெண்கோ | காலம் தெரியவில்லை |
வஞ்சன் | காலம் தெரியவில்லை |
மருதம் பாடிய இளங்கடுங்கோ | காலம் தெரியவில்லை |
கணைக்கால் இரும்பொறை | காலம் தெரியவில்லை |
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை | காலம் தெரியவில்லை |
பிற்காலச் சேரர்கள் | |
பெருமாள் பாசுகர ரவிவர்மா | பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு |
edit |
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.